பெற்றோருக்கு குழந்தைகளின் ஜாதகம் எப்போது பலன்களை தரும்!.


 !!பெற்றோருக்கு குழந்தைகளின் ஜாதகம் எப்போது பலன்களை தரும்!...



🌟 ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குழந்தை கருவுற்ற 100 நாட்களுக்கு பிறகு அந்த சிசுவின் ஜாதகப் பலன்களை பெற்றோர்கள் பெறக்கூடும் என்று
சொல்லப்படுகிறது.

🌟 குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருக்கும்போது, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் அது பலனளிக்கும் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

🌟 ஒரு சில பெற்றோர்களுக்கு, கரு உருவாகும் சமயத்தில் குடும்ப சூழ்நிலையானது சாதாரணமாக இருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துகளை பெற்று விடுகின்றனர்.

🌟 இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஆனால், குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேலே கூறியுள்ள பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

🌟 பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி உள்ள காலக்கட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளவர்களாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.

🌟 பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் ஜோதிடம் கூறுகின்றது.

🌟 குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் பெற்றோர்களின் ஜாதக நேரங்களே காரணம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ழூ உங்கள் மனதில் மற்றும் கனவில் தோன்றும்

Comments