லட்சுமி குபேர விரதம் பற்றி பார்க்குமுன் எல்லா செல்வங்களுக்கும் குபேரன் எப்படி அதிபதியானான் என்ற கதையை அறிவோம். விச்ரவசு என்று ஒரு மகரிஷி இருந்தார். அவர் எப்போதும் சிவனை நினைத்தே தியானம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு யாகங்கள் செய்யவேண்டும் என்று ஆவல் உருவாயிற்று. ஆனால், பிரம்மசாரிகள் யாகம் செய்யக்கூடாது என்று ஒரு விதி இருந்தது. அதனால், யாகங்கள் இயற்றி இறைவனுக்கு சேவை புரியவேண்டும் என்ற ஆவலில் விச்ரவசு, பரத்வாஜ மகரிஷியின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயரிட்டார். மகனும் தந்தையாருக்குத் தப்பாமல்தான் பிறந்திருந்தான். ஆமாம், மழலை வயசிலிருந்தே எப்போதும் பூஜை, இறை நாமஜபம் என்று ஆழ்ந்த பக்திமானாக விளங்கினான். இள வயதடைந்ததும் அவன் தன் தந்தையாரிடம், தான் பிரம்மனை நோக்கி தவம் செய்யப்போவதாகவும், அதுக்கு அவருடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றும் கேட்டுக்’கொண்டான்.
முனிவர் விச்ரவசுவுக்கு அதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது! உடனே அவனுக்கு ஆசி சொல்லி அனுப்பிவைத்தார். ஆனால் வைஸ்ரவணன் தவம் மேற்கொண்ட முறை மிகவும் கடுமையாக இருந்தது. ஆமாம், ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் நீரை மட்டும் குடித்தவாறு தவமிருந்தான். நாளாக ஆக தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திட்டான். இப்போது வெறும் காற்றுதான் அவனுடைய ஆகாரம். இப்படிப் பல வருடங்கள் தவமியற்றிய அவன்மீது மனமிரங்கிய பிரம்மன் அவனுக்கு தரிசனம் தந்தார். ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ‘உங்களை தரிசிப்பதைவிட வேறு என்ன பாக்கியம் எனக்கு வேண்டும்? இதைவிட நான் வரமாக எதைக் கேட்பது?’ என்று பதிலளித்தான் வைஸ்ரவணன். வியந்தார் பிரம்மன். அவருக்கும் சரி, அவருடன் வந்திருந்த தேவர்களுக்கும் சரி, அவனுடைய அடக்கமான குணம் மிகவும் பிடித்திருந்தது.
எதிலும் பற்றில்லாமல் குறைகாண முடியாத பக்தியோடு விளங்கும் இவனுக்குப் பொருத்தமான ஒரு பதவியைத் தர விரும்பினார் பிரம்மன். அதன்படி அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாக, எல்லா செல்வங்களையும் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்பவனாக அவனை நியமித்தார். அப்போதிலேருந்து எல்லா செல்வங்களுக்கும் அவன் அதிபதியானான். அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாக, குபேரன் என்ற பெயருடன் திகழ்ந்தான். எல்லா செல்வங்களும் சேர்ந்ததால், அவன் லட்சுமி குபேரன் ஆனான். இந்த லட்சுமி குபேரனை நோக்கி விரதமிருக்கலாம். வைஸ்ரவணன்போல கடுமையாக தவமியற்ற நம்மால் முடியாதுதான். ஆனால், எளிமையாக லட்சுமி குபேர விரதத்தைக் கடைபிடிக்கலாம் - நிம்மதியாக வாழவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் போதுமான செல்வம் கிடைக்கவும் வழி செய்வார்கள், லட்சுமியும், குபேரனும்.
ஒரு வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அன்று அஷ்டமி, நவமி என்ற திதி இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதேபோல அன்று அமிர்த யோகம் அல்லது சித்த யோகம் என்று இருந்தால் ரொம்ப விசேஷம். இதுபோன்ற ஒருசில விரதங்களுக்கு இப்படி நாள் தேர்வு செய்வது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். முந்தின நாளே லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம், லட்சுமி குபேரன் இணைந்த படம் என்று லட்சுமி, குபேரன் சம்பந்தப்பட்ட படம் ஏதாவது ஒன்றை எடுத்து சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். படமாக இல்லாமல் விக்ரகமாக இருந்தாலும் ரொம்ப விசேஷம்தான். மஞ்சள்தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழையிலை ஆகியவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை விடியற்காலையில் எழுந்து, நீராடிவிட்டு, சுத்தமான உடைகளை அணிந்துகொண்டு நெற்றியில குங்குமம் இட்டுக்கொள்ளவேண்டும். அன்றைக்கு பத்தரை முதல் பன்னிரண்டு மணிவரை ராகு காலம் என்பதால் பத்தரை மணிக்கு முன்னாலேயே பூஜையை முடிப்பதாகத் திட்டமிட்டுக்கொள்ளலாம். லட்சுமி குபேரன் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூஜையிலே வைக்க வேண்டும். இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு தலை வாழையிலையை வைத்து அதுக்கு மேல் நவதானியங்களையும் தனித்தனியாக, சுற்றிவர பரப்பி வையுங்கள். அதற்கு நடுவில், சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை வைத்து இந்தத் தண்ணீருக்குள் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டுக் கலந்துக் கொள்ளுங்கள். சொம்பு வாய்க்குள் மாவிலைக் கொத்தைச் செருகி அதன் நடுவில் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை நிறுத்தினாற்போல வையுங்கள்.
நிவேதனத்துக்கு வெற்றிலை-பாக்கு வாழைப்பழம் எடுத்து வைக்கலாம். பொதுவாகவே வாழைப்பழத்தை பூஜைக்கு வைப்பதில் ஒரு தத்துவம் இருக்கிறது. எந்தப் பழத்திற்கும் விதை உண்டு. பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த விதையை நிலத்திலே எறிந்தோமென்றால், அந்தப் பழம் தரும் செடியோ, மரமோ மறுபடி அந்த விதையிலிருந்து முளைக்கலாம். ஆனால் வாழைப்பழத்தில் மட்டும் அப்படி இல்லை. தூக்கிப் போடப்படுவது தோலைத்தான். அதனால்தான் வாழை மரத்துக்கு மட்டும் விதை, கிளை என்று கிடையாது; வாழைக் கன்றுதான். அந்தக் கன்றை நட்டுவைத்தால் அது மரமாக வளரும். அதற்குக் கீழே இன்னொரு வாழைக்கன்று வளரும். அதாவது, வாழைப்பழத்திலிருந்து ஒரு வாழைமரம் வளராது என்ற உண்மையானது,
மறுபிறவி இல்லாத ஒரு நிலைமையை மனிதன் அடையவேண்டும் என்ற தத்துவமே. அதனாலேயே வாழைப்பழத்தை நிவேதனம் செய்கிறோம். இந்த நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக ஏதாவது காசு வைக்கலாம். ஒரே ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. அவரவர் வசதிக்கேற்ப வைக்கலாம். இந்த பொருட்களையெல்லாம் கலசத்துக்கு முன்னால் வையுங்கள். கலசத்தில் இருக்கும் தேங்காய்க் குடுமியில் நறுமண மலர்மாலையைச் சுற்றி வைக்கலாம். ஊதுவத்தி ஏற்றி வைக்கலாம். இந்த அமைப்பை மேற்கு பார்த்து வைத்துக்கொண்டால், கிழக்கு பார்த்து அமர்ந்தபடி பூஜை செய்ய வசதியாக இருக்கும். கிழக்கு-மேற்கு திசை வீட்டமைப்புக்கு வசதியாக இல்லையென்றால், வடக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். பொதுவாக பூஜை செய்யப்படும் படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருப்பது நல்லது.
பிறகு முதலில், தெரிந்த பிள்ளையார் பாடல் எதையாவது சொல்லலாம். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் என்று எது தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம். விநாயகரின் அனுமதியும், ஆசியும் பெற்று, அடுத்ததாக தெரிந்த லட்சுமி ஸ்லோகம், பாட்டு என்று சொல்லலாம். அந்த ஸ்தோத்திர புத்தகங்கள் இருந்தால் அதைப் பார்த்தும் படிக்கலாம். ‘ஸ்லோகமும், பாட்டும் தெரியாதே, வீட்டில் ஸ்லோக புத்தகம்கூட இல்லையே’ என்றாலும், யோசிக்கவேண்டாம். ‘அஷ்ட லட்சுமியே போற்றி, குபேர லட்சுமியே போற்றி, தனலட்சுமியே போற்றி’ என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். குபேர ஸ்துதி தெரிந்தால் சொல்லலாம். அப்படியும் இல்லையென்றால், ‘குபேராய நமஹ, வைஸ்ரவணாய நமஹ, தனாதிபதியே நமஹ’ என்று சொல்லி அர்ச்சனையை முடிக்கலாம் அல்லது இதோ, இந்த சிறிய, எளிய ஸ்லோகம் சொல்லியும் உதிரிப் பூக்களால் அர்ச்சித்து பூஜிக்கலாம்: ‘ஓம் யக்ஷாய, குபேராய, வைச்ரவணாயா, தன் தான்யாதிபதையே, தன தான்ய ஸம்ருத்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா.’
பிறகு சாம்பிராணி போடுவது நல்லது. அந்தப் புகையை வீடு முழுவதும் எடுத்துக்கொண்டுபோய் காட்டலாம். வாழைப்பழம், காய்ச்சின பசும்பால், பாயசம் என்று முடிந்த பொருட்களை லட்சுமி குபேரனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். அடுத்து, கற்பூரம் காட்டி, மணியடித்து பூஜையை நிறைவு செய்யலாம். வெற்றிலை-பாக்கு, பழங்களையும் தட்சணை காசையும் யாராவது ஏழை சுமங்கலிப் பெண்ணுக்கு தானமாகத் தரலாம். நிறைவாக பொதுவான ஒரு வேண்டுதலையும் குபேரன் முன்னால் வைக்கலாம்: ‘ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமான செல்வத்தையும், நிரந்தரமான சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் அருள்வாய் குபேரனே!’ குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இருந்தால், அவர்கள் எந்த ஜாதி, மதம் என்று இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்காக வேண்டிக்கொள்வது மிகவும் உத்தமம்.
இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். பெண்கள்தான் என்றில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை லட்சுமி குபேர பூஜை மேற்கொள்ளும் நாளில் சொல்லித் துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.
உபைதுமாம் தேவ ஸக: கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் வ்ருத்திம் ததாதுமே.
பொதுப் பொருள்: தேவர்களின் நண்பனான புகழ்பெற்ற குபேரனின் அருள் என்றும் என்னுடன் நிலைக்கட்டும். என் கீர்த்தியும் செல்வ வளமும் என்றென்றும் பெருகிக்கொண்டே இருக்கட்டும். சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி எனும் உயர்ந்த நவநிதிகளுடன் என்னை வந்து அடையட்டும்.
(ஸ்ரீரத்னகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை லட்சுமி குபேர விரதம் மேற்கொள்ளும் நாளில் சொல்லிக்கொண்டிருந்தால், அனைத்து குபேரசம்பத்துகளும் அடையப் பெறுவோம்) இவ்வாறு விரதம் மேற்கொண்ட நாளில், முடிந்தால் திருச்சானூர் சென்று அலர்மேல் மங்கைத் தாயாரை தரிசனம் செய்யலாம்; இயலாதவர்கள் பக்கத்துக் கோயிலில் பெருமாளுடன் கொலுவீற்றிருக்கும் தாயாரை சேவித்துவிட்டு வரலாம்.
முனிவர் விச்ரவசுவுக்கு அதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது! உடனே அவனுக்கு ஆசி சொல்லி அனுப்பிவைத்தார். ஆனால் வைஸ்ரவணன் தவம் மேற்கொண்ட முறை மிகவும் கடுமையாக இருந்தது. ஆமாம், ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் நீரை மட்டும் குடித்தவாறு தவமிருந்தான். நாளாக ஆக தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திட்டான். இப்போது வெறும் காற்றுதான் அவனுடைய ஆகாரம். இப்படிப் பல வருடங்கள் தவமியற்றிய அவன்மீது மனமிரங்கிய பிரம்மன் அவனுக்கு தரிசனம் தந்தார். ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ‘உங்களை தரிசிப்பதைவிட வேறு என்ன பாக்கியம் எனக்கு வேண்டும்? இதைவிட நான் வரமாக எதைக் கேட்பது?’ என்று பதிலளித்தான் வைஸ்ரவணன். வியந்தார் பிரம்மன். அவருக்கும் சரி, அவருடன் வந்திருந்த தேவர்களுக்கும் சரி, அவனுடைய அடக்கமான குணம் மிகவும் பிடித்திருந்தது.
எதிலும் பற்றில்லாமல் குறைகாண முடியாத பக்தியோடு விளங்கும் இவனுக்குப் பொருத்தமான ஒரு பதவியைத் தர விரும்பினார் பிரம்மன். அதன்படி அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாக, எல்லா செல்வங்களையும் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்பவனாக அவனை நியமித்தார். அப்போதிலேருந்து எல்லா செல்வங்களுக்கும் அவன் அதிபதியானான். அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாக, குபேரன் என்ற பெயருடன் திகழ்ந்தான். எல்லா செல்வங்களும் சேர்ந்ததால், அவன் லட்சுமி குபேரன் ஆனான். இந்த லட்சுமி குபேரனை நோக்கி விரதமிருக்கலாம். வைஸ்ரவணன்போல கடுமையாக தவமியற்ற நம்மால் முடியாதுதான். ஆனால், எளிமையாக லட்சுமி குபேர விரதத்தைக் கடைபிடிக்கலாம் - நிம்மதியாக வாழவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் போதுமான செல்வம் கிடைக்கவும் வழி செய்வார்கள், லட்சுமியும், குபேரனும்.
ஒரு வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அன்று அஷ்டமி, நவமி என்ற திதி இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதேபோல அன்று அமிர்த யோகம் அல்லது சித்த யோகம் என்று இருந்தால் ரொம்ப விசேஷம். இதுபோன்ற ஒருசில விரதங்களுக்கு இப்படி நாள் தேர்வு செய்வது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். முந்தின நாளே லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம், லட்சுமி குபேரன் இணைந்த படம் என்று லட்சுமி, குபேரன் சம்பந்தப்பட்ட படம் ஏதாவது ஒன்றை எடுத்து சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். படமாக இல்லாமல் விக்ரகமாக இருந்தாலும் ரொம்ப விசேஷம்தான். மஞ்சள்தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழையிலை ஆகியவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை விடியற்காலையில் எழுந்து, நீராடிவிட்டு, சுத்தமான உடைகளை அணிந்துகொண்டு நெற்றியில குங்குமம் இட்டுக்கொள்ளவேண்டும். அன்றைக்கு பத்தரை முதல் பன்னிரண்டு மணிவரை ராகு காலம் என்பதால் பத்தரை மணிக்கு முன்னாலேயே பூஜையை முடிப்பதாகத் திட்டமிட்டுக்கொள்ளலாம். லட்சுமி குபேரன் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூஜையிலே வைக்க வேண்டும். இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு தலை வாழையிலையை வைத்து அதுக்கு மேல் நவதானியங்களையும் தனித்தனியாக, சுற்றிவர பரப்பி வையுங்கள். அதற்கு நடுவில், சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை வைத்து இந்தத் தண்ணீருக்குள் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டுக் கலந்துக் கொள்ளுங்கள். சொம்பு வாய்க்குள் மாவிலைக் கொத்தைச் செருகி அதன் நடுவில் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை நிறுத்தினாற்போல வையுங்கள்.
நிவேதனத்துக்கு வெற்றிலை-பாக்கு வாழைப்பழம் எடுத்து வைக்கலாம். பொதுவாகவே வாழைப்பழத்தை பூஜைக்கு வைப்பதில் ஒரு தத்துவம் இருக்கிறது. எந்தப் பழத்திற்கும் விதை உண்டு. பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த விதையை நிலத்திலே எறிந்தோமென்றால், அந்தப் பழம் தரும் செடியோ, மரமோ மறுபடி அந்த விதையிலிருந்து முளைக்கலாம். ஆனால் வாழைப்பழத்தில் மட்டும் அப்படி இல்லை. தூக்கிப் போடப்படுவது தோலைத்தான். அதனால்தான் வாழை மரத்துக்கு மட்டும் விதை, கிளை என்று கிடையாது; வாழைக் கன்றுதான். அந்தக் கன்றை நட்டுவைத்தால் அது மரமாக வளரும். அதற்குக் கீழே இன்னொரு வாழைக்கன்று வளரும். அதாவது, வாழைப்பழத்திலிருந்து ஒரு வாழைமரம் வளராது என்ற உண்மையானது,
மறுபிறவி இல்லாத ஒரு நிலைமையை மனிதன் அடையவேண்டும் என்ற தத்துவமே. அதனாலேயே வாழைப்பழத்தை நிவேதனம் செய்கிறோம். இந்த நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக ஏதாவது காசு வைக்கலாம். ஒரே ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. அவரவர் வசதிக்கேற்ப வைக்கலாம். இந்த பொருட்களையெல்லாம் கலசத்துக்கு முன்னால் வையுங்கள். கலசத்தில் இருக்கும் தேங்காய்க் குடுமியில் நறுமண மலர்மாலையைச் சுற்றி வைக்கலாம். ஊதுவத்தி ஏற்றி வைக்கலாம். இந்த அமைப்பை மேற்கு பார்த்து வைத்துக்கொண்டால், கிழக்கு பார்த்து அமர்ந்தபடி பூஜை செய்ய வசதியாக இருக்கும். கிழக்கு-மேற்கு திசை வீட்டமைப்புக்கு வசதியாக இல்லையென்றால், வடக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். பொதுவாக பூஜை செய்யப்படும் படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருப்பது நல்லது.
பிறகு முதலில், தெரிந்த பிள்ளையார் பாடல் எதையாவது சொல்லலாம். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் என்று எது தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம். விநாயகரின் அனுமதியும், ஆசியும் பெற்று, அடுத்ததாக தெரிந்த லட்சுமி ஸ்லோகம், பாட்டு என்று சொல்லலாம். அந்த ஸ்தோத்திர புத்தகங்கள் இருந்தால் அதைப் பார்த்தும் படிக்கலாம். ‘ஸ்லோகமும், பாட்டும் தெரியாதே, வீட்டில் ஸ்லோக புத்தகம்கூட இல்லையே’ என்றாலும், யோசிக்கவேண்டாம். ‘அஷ்ட லட்சுமியே போற்றி, குபேர லட்சுமியே போற்றி, தனலட்சுமியே போற்றி’ என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். குபேர ஸ்துதி தெரிந்தால் சொல்லலாம். அப்படியும் இல்லையென்றால், ‘குபேராய நமஹ, வைஸ்ரவணாய நமஹ, தனாதிபதியே நமஹ’ என்று சொல்லி அர்ச்சனையை முடிக்கலாம் அல்லது இதோ, இந்த சிறிய, எளிய ஸ்லோகம் சொல்லியும் உதிரிப் பூக்களால் அர்ச்சித்து பூஜிக்கலாம்: ‘ஓம் யக்ஷாய, குபேராய, வைச்ரவணாயா, தன் தான்யாதிபதையே, தன தான்ய ஸம்ருத்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா.’
பிறகு சாம்பிராணி போடுவது நல்லது. அந்தப் புகையை வீடு முழுவதும் எடுத்துக்கொண்டுபோய் காட்டலாம். வாழைப்பழம், காய்ச்சின பசும்பால், பாயசம் என்று முடிந்த பொருட்களை லட்சுமி குபேரனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். அடுத்து, கற்பூரம் காட்டி, மணியடித்து பூஜையை நிறைவு செய்யலாம். வெற்றிலை-பாக்கு, பழங்களையும் தட்சணை காசையும் யாராவது ஏழை சுமங்கலிப் பெண்ணுக்கு தானமாகத் தரலாம். நிறைவாக பொதுவான ஒரு வேண்டுதலையும் குபேரன் முன்னால் வைக்கலாம்: ‘ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமான செல்வத்தையும், நிரந்தரமான சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் அருள்வாய் குபேரனே!’ குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இருந்தால், அவர்கள் எந்த ஜாதி, மதம் என்று இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்காக வேண்டிக்கொள்வது மிகவும் உத்தமம்.
இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். பெண்கள்தான் என்றில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை லட்சுமி குபேர பூஜை மேற்கொள்ளும் நாளில் சொல்லித் துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.
உபைதுமாம் தேவ ஸக: கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் வ்ருத்திம் ததாதுமே.
பொதுப் பொருள்: தேவர்களின் நண்பனான புகழ்பெற்ற குபேரனின் அருள் என்றும் என்னுடன் நிலைக்கட்டும். என் கீர்த்தியும் செல்வ வளமும் என்றென்றும் பெருகிக்கொண்டே இருக்கட்டும். சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி எனும் உயர்ந்த நவநிதிகளுடன் என்னை வந்து அடையட்டும்.
(ஸ்ரீரத்னகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை லட்சுமி குபேர விரதம் மேற்கொள்ளும் நாளில் சொல்லிக்கொண்டிருந்தால், அனைத்து குபேரசம்பத்துகளும் அடையப் பெறுவோம்) இவ்வாறு விரதம் மேற்கொண்ட நாளில், முடிந்தால் திருச்சானூர் சென்று அலர்மேல் மங்கைத் தாயாரை தரிசனம் செய்யலாம்; இயலாதவர்கள் பக்கத்துக் கோயிலில் பெருமாளுடன் கொலுவீற்றிருக்கும் தாயாரை சேவித்துவிட்டு வரலாம்.
Comments
Post a Comment