✾ ஒருவரது ஜாதகப்படி சுக்கிரன் என்பவர் ஜாதகருடைய சகல சுகபோகங்களின் அதிபதி ஆவார். இவர் ஒருவருக்கு பொன், பொருள், அழகான மனைவி, உயர் பதவி, கலை, வாகன யோகம் போன்றவைகளை தந்து சிறப்புடன் வாழும் யோகத்தை தருபவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும்
அதிபதி ஆவார். ✾ மகாலட்சுமியின் உறைவிடமாக கொண்டிருப்பவர் சுக்ரன். சுக்ரனின் அதிதேவதை துர்க்கை. இவர் இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் அதிகமாகவும், வேகமாகவும் கொடுக்கக் கூடியவர். ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவரது ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றிருந்தால், அந்த நபர் அழகு, நல்ல தோற்றம், முக வசீகரம் பெற்றிருப்பார்கள். சுக்ர மேடு : சுக்ரமேடு மற்ற கிரக மேடுகளைவிட அதிக அளவு பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். கட்டை விரலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது சுக்ரமேடு. இனி கைரேகை நிலவரப்படி சுக்ரனின் பலனைப் பற்றிப் பார்ப்போம்.....! ✾ சுக்ர மேட்டின் அடிப்பாகத்தில் நட்சத்திரக் குறி தென்பட்டால், ஒரு பெண்ணால் தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தை தெரிவிப்பதாக அர்த்தம். ✾ சுக்ர மேடு பின்னலின்றி அழகாக அமைந்திருந்தால், நல்ல திருமண வாழ்வு அமையும். ✾ சுக்ர மேட்டில் செங்குத்து ரேகை தென்பட்டால் செய்கின்ற தொழிலில் லாபம் கிடைக்கும். ✾ சுக்ர மேட்டில் வட்டக்குறி தென்பட்டால், நோய்கள் உண்டாகும். ✾ சுக்ர மேடு பள்ளமாக அமைந்திருந்தால் திருமண வாழ்வு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சுக்ரனின் அருள் கிடைக்க...! ✾ அவரவர் கையில் சுக்ரமேடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு சுக்ரனின் பலன் குறைவாக இருப்பின், அவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்ய சுக்ரனின் அருள் கிட்டும். ✾ மேலும் ஸ்ரீரங்கம், திருநாவலு}ர், பட்டீஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று சுக்ரனை தரிசித்து சுக்ரனின் பலன் பெறலாம். ஒருவரது ஜாதகத்தில் சுக்ரன், வர்க்கோத்தம நிலையில் அமைந்திருந்தால், அந்த நபரின் அனைத்து ஆசைகளும் நிறைவேறுவது என்பது மிகவும் கடினமாகும்.
Comments
Post a Comment