திருமண வரம் அருளும் பங்குனி உத்திரம்!

🌿 பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பங்குனி உத்திரம்" என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பு மி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வேண்டி வழிபடும் விரதம் இது. 🌿 திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக்இன்றைய ராசி பலன்கள் Click here . கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். இந்த விரதத்தின் மகிமையை
அளவிட முடியாது. திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது. விரதம் இருப்பது எப்படி? 🌿 பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். 🌿 பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு பு ஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும். அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். 🌿 ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பு ஜை செய்து தாம்பு லத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். 🌿 அன்று முழுவதும் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும். 🌿 தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள். இன்றைய ராசி பலன்கள் Click here .

Comments