குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.
.
பிரச்சனைகளும்...பரிகாரங்களும்...!
மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க :
🌿 அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
வியாபாரிகள் :
🌿 தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சு டம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்குமம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும். திரிசு லத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.
கிரக பிரச்சனைகள் :
🌿 விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
புண்ணியம் கிடைக்க :
🌿 திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வதால் நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும்.
விரைவில் திருமணம் நடைபெற :
🌿 ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுக்க வேண்டும்.
நிலம் வாங்க :
🌿 திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
அரசு வேலைகளில் உயர் பதவி அடைய :
🌿 திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற சில எளிய பரிகாரங்கள் :
🍀 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
🍀 ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சு னியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
🍀 சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.
🍀 பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
🍀 பௌர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பு ஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
உங்கள் பிரச்சனைக்களுக்கேற்ற பரிகாரங்களை செய்து பிரகாசமான வாழ்வை பெறுங்கள்....!
Comments
Post a Comment